ஆனந்த சுதாகரனின் விடுதலையினை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை!

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் கைதி சச்சியானந்தம் ஆனந்தசுதாகரனை அவரது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக நிபந்தனைகளின்றி பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை மட்டக்களப்பு காந்திப்பூங்கா முன்னதில் மக்களாலும், இளைஞர்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்றைய முதல் நாள் நிகழ்வில் மட்டு, திருகோணமலை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை அவர்களும் அரசியல் பிரமுகர்களும் மற்றும் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் பல பொது மக்களும் கலந்து தமது கையெழுத்துகளைப் பதிவிட்டிருந்தனர்.