யாழ்ப்பாணம்- நாயன்மார் கட்டு பகுதியில் இளம்பெண்கள் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் நாயன்மார் கட்டு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் நின்றிருந்த மூன்று பெண் பிள்ளைகள் மீது சற்று முன்னர் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவில் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த பெண் பிள்ளைகள் மீது 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

தலையில் படுகாயமடைந்த மூன்று பெண் பிள்ளைகளும் தற்போது யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதேவேளை தாக்குதல் மேற்கொண்டவர் மனநலம் குன்றியவர் என தெரிவிக்கப்பட்டுகிறது.