திருமணமான ஆறு நாளில் மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன்!!

இந்தியாவில் திருமணமான 6 நாளில் மனைவியை அவர் காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பசுதீப் தாபோ (28). இவருக்கும் 24 வயது பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.

திருமணம் நடந்த பின்னர் மணப்பெண்ணின் மூன்று உறவுக்கார இளைஞர்கள் பசுதீப் வீட்டில் வந்து தங்கியுள்ளனர்.அதில் ஒருவர் மட்டும் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.புதுமண தம்பதிகள் இருக்கும் வீட்டில் அவர் இருப்பதை ஊர் மக்கள் பொறுத்து கொள்ளாமல் இளைஞரிடம் சண்டை போட்டுள்ளனர்.

அப்போது தான் அவர் திருமணமான புதுப்பெண்ணின் காதலர் என தெரியவந்தது.இது குறித்து பசுதீப்புக்கு தெரியவந்த நிலையில் அவர் மனதை கல்லாக்கி கொண்டு ஒரு முடிவுக்கு வந்தார்.

அதன்படி தனது மனைவியை திருமணமான ஆறே நாளில், அவர் காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.இந்தப் பிரச்சனையை தீர்க்க இதைவிட்டால் வேறு வழியில்லை என பசுதீப் கூறியுள்ளார்.