தப்பியோடியவர்கள் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி இமையானன் பகுதியில் வீடொன்றில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது பொதுமக்களால் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டபோது ஒருவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்போது மற்றய மூவர் தப்பியோடியுள்ளனர்.
சாவகச்சேரி நூணாவில் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து திருட்டு நடவடிக்கைக்க பயன்படுத்திய வடி ரக வாகம் ஒன்றும், 12 ஸ்மார்ட் தொலைபேசிகளும், 4சோடி கால் சலங்கைகள், வீட்டில் பணம் சேமிக்கும் உண்டியல்கள் நான்கு, ஒருதொகை கட்டார்’ நாட்டு பணம்,மற்றும் 2 கமராக்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டவர்கள் வல்லெட்டித்துறைப்பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை வல்லெட்டித்துறைப்பொலிஸார் எடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் புத்தளத்தினை சேர்ந்தவர் எனவும்,மற்றயவர்கள் வவுனியா மற்றும் ஊர்காவற்துறையை சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்ப்பட்டுள்ளனர்.