கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நகரப்பகுதியை அண்மித்த பிரதேசத்தில் வைத்து பொலிஸ் உளவுத் துறையின் தங்காலை பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு சேவையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸ் கான்ஸ்டபிளின் தோள்கட்டுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் உடனடியாக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
.