யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்!

யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 15.03.2018 அன்று அனுமதிக்கப்பட்ட எஸ்.பரமானந்தன் என்ற பெயருடைய 63 வயதுடைய முதியவர் 17.03.2018 அன்று முதல் காணாமல் போயுள்ளார். இவர் உரையாடுவதற்கு சிரமப்படுவார். சில நேரங்களல் அசாதாரணமான நடத்தையை வெளிப்படுத்துவார். சிவபூமி முதியோர் இல்லத்தைச் சேர்ந்த இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலை நிருவாகத்துடன் தொடர்பு கொள்ளவும்

பணிப்பாளர்
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்