ரஷ்ய அதிபர் தேர்தலைக் கண்காணிக்க மொஸ்கோ செல்கிறார் நாமல்

ரஷ்யாவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைக் கண்காணிக்க, கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் வரும் மார்ச் 18ஆம் நாள் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலை சுதந்திரமான கண்காணிப்பாளராக கண்காணிப்பதற்கு வருமாறு நாமல் ராஜபக்சவுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அழைப்பை ஏற்று, நாமல் ராஜபக்ச இன்று ரஷ்யாவுக்குப் புறப்படவுள்ளார்.