தொண்டைமானாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம்15ம் திகதிக்கு முன்னர் நிறைவடையும்

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம்15ம் திகதிக்கு முன்னர் நிறைவடையும் அதன்மூலம்வடமாகாண நிலத்தடி நீர்வளம் பாதுகாக்கப்பட்டுவதுடன் நன்நீர் வளத்தை பெருக்க முடியும் எனவும் வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் திரு பிறேம்குமார் தெரிவித்துள்ளார்.
வடமாகாண நீர்ப்பாசன திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கயிற்கான திட்ட தெளிவூட்டல் கருத்தமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அணைக்கட்டு மற்றும் நீர்வழங்கல் கருத்திட்டமிடல் திட்டத்தின் கீழ் உலக வங்கியின் நிதியில் 400 மில்லியன் ருபாய் செலவில் தொண்டைமானாறு உவர் நீர் தடுப்பணை திருத்தியமைக்கப்பட்டு வருகின்றது.
1960ம்; ஆண்டுகளில் கட்டப்பட்ட தொண்டைமானாறு உவர் நீர் தடுப்பணை யுத்தம் காரணமாக முறையான பராமரிப்பின்மையால் பழுதடைந்த நிலையில் நன்நீருடன் உவர் நீர் கலக்கும் அபாய நிலையில் காணப்பட்டது தற்போது துருப்பிடிக்காத உலோகங்களால் ஆன கதுவுகள் இடப்பட்ட அணை இடப்பட்டு வருகின்றது இதன் மூலம் விவசாயத்திற்கு தேவையான பெருமளவிலான நீர் வளத்தை பாதுகாக்க மூடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் வடமாகாண நீர்ப்பாசன உதவிப் பணிப்பாளர்சுதாகரன் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.