யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் (JSAC) ஆதரவில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம்!

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் (JSAC) ஆதரவில் சர்வதேச மகளிர் தினம் இன்று (12.03.2018) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் கொண்டாடப்பட்டது. இதன்போது உள்ளூராட்சித் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 19 பெண்கள் கௌரவிக்கப்பட்டதோடு பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்த பெண்களும் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.