கூகுளை மிரட்டிய கண்டி வன்முறையாளர்கள்! அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட தரவுகள்

கடந்த சில நாட்களாக கண்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்களுக்கு சமூக வலைத்தளங்கள் நேரடியாக தாக்கம் செலுத்தியுள்ளதாக பல தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக இலங்கையில் காலவரையின்றி பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களை முடக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவங்களின் போது சமூக வலைத்தளங்களுக்கு அப்பால் கூகுள் தேடுபொறியில் சிலவற்றைய தேடியுள்ளதாக Google Trends தரவுகள் உறுதி செய்துள்ளது.

அதற்கமைய அண்மையில் கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட மோதலில் பயன்படுத்தப்பட்ட பெட்ரோல் குண்டு தயாரிப்பதற்கு அவசியமான தகவல்களை கூகுள் தேடு பொறி ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 6ஆம் திகதியில் இருந்து 8ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் Google Trends தரவுகளை ஆய்வு செய்யும் போது இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மோதலில் போது பெட்ரோல் குண்டுகளுடன் வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட நிலையில் அதனை தயாரிப்பதற்கான உதவிகளை கூகுள் மூலம் தேடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த நாட்களில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது பெருமளவு பெட்ரோல் குண்டுகள் மீட்கப்பட்டன.

வன்முறை சம்பவங்களின் போது நூற்றுக்கு மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் தீ வைக்கப்பட்டன. இதற்காக பெற்றோல் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனை உறுதிப்படுத்தும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.