கேரளா கஞ்சாவுடன் பளை பிரதேசத்தை சேர்ந்த நபர் கைது

பருத்தித்துறை பொலிஸ் பிரிவின் குடாவத்தனை பிரதேசத்தில் 4.36 கிலோகிராம் கேரளா கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

காங்சேன்துறை புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் பருத்தித்துறை பொலிஸ் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் இந்த சந்தேகநபர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 33 வயதான பளை பிரதேசத்தை சேர்ந்தவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் இன்று பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.