சமூக ஊட­கங்­க­ளைத் தடை செய்­வ­தில் எந்தப் பயனும் இல்லை- நாமல்!!

சமூக ஊட­கங்­க­ளைத் தடை செய்­வ­தில் பய­னில்லை என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நாமல் ராஜ­பக்ச தெரி­வித்­துள்­ளார். உயர்­ நீ­தி­மன்­றில் வழக்­குக்­காக வந்­தி­ருந்த நாம­லி­டம் செய்­தி­யா­ளர்­கள் கேள்வி எழுப்­பி­னர். அதற்­குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:



இணை­யத் தளங்­கள், சமூக ஊடக வலை­ய­மைப்­புக்­களைத் தடை செய்­வ­தன் மூலம் இனப் பிரச்­சி­னைக்கு எந்த வகை­யி­லும் தீர்வு காண முடி­யாது.பொய்ப் பரப்­பு­ரை­களைத் தடுக்­கும் நோக்­கில் இவ்­வாறு சமூக ஊடக வலை­ய­மைப்­புக்­கள் தடை செய்­யப்­பட்ட போதி­லும் அதில் பெரிய பயன் கிடை­யாதுதடை­களை மீறி இணை­யத்­தைப் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய மாற்று வழி­கள் உண்டு. 2015ஆம் ஆண்­டில் இந்­தி­யா­வும் இது போன்­ற­தொரு முயற்­சியை எடுத்த போதி­லும் அதில் எவ்­வித பய­னும் கிடைக்­க­வில்லை – – என்­றார்.