வழமைக்குத் திரும்பியது கண்டி: ஊடரங்கு சட்டம் இல்லை

கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படமாட்டாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வன்முறை காரணமாக கடந்த சில நாட்களாக கண்டி மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அங்கு தற்போது வழமைநிலை ஏற்பட்டுள்ளதால் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.