கண்டி வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேகத்தில் 146 பேரை இதுவரை தாம் கைது செய்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கலவரத்தின் முக்கிய சூத்திரதாரி என்று நம்பப்படும் மகாசென பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 10 பேரிடமும், 4ஆம் மாடியில் வைத்து சிறப்புப் பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கண்டி வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள், ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்கள் உள்ளிட்ட 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 120 பேர் வரையில் கண்டி மாவட்டத்தை சாராதவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.