கண்டி வன்முறைகள் – 146 பேர் கைது!!

கண்டி வன்­மு­றை­க­ளு­டன் தொடர்­பு­டைய சந்­தே­கத்­தில் 146 பேரை இது­வரை தாம் கைது செய்­துள்­ள­னர் என்று பொலிஸ் தலை­மை­ய­கம் தெரி­வித்­துள்­ளது.
கல­வ­ரத்­தின் முக்­கிய சூத்­தி­ர­தாரி என்று நம்­பப்­ப­டும் மகா­சென பல­காய அமைப்­பின் தலை­வர் அமித் வீர­சிங்க உள்­ளிட்ட 10 பேரி­ட­மும், 4ஆம் மாடி­யில் வைத்து சிறப்­புப் பொலிஸ் குழு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.

‘‘கண்டி வன்­மு­றை­க­ளுக்கு எங்­கி­ருந்து இவர்­க­ளுக்கு நிதி கிடைத்­தது என்­பதை வெளிப்­ப­டுத்த ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­கள் இடம்­பெ­று­வ­தா­க­வும் அதற்­குச் சமாந்­த­ர­மாக வக்­கி­ர­மான முறை­யில் பின்­ன­ணி­யில் இருந்து வன்­மு­றை­க­ளுக்கு தலை­மை­ய­ளித்­த­வர்­கள் தொடர்­பி­லும், இவர்­க­ளுக்­கும் அர­சி­யல் தரப்­பி­ன­ருக்­கும் உள்ள தொடர்­பு­கள் என்­பன குறித்­தும் விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது’’ என்று பொலிஸ் ஊட­கப் பேச்­சா­ளர் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் ருவன் குண­சே­கர தெரி­வித்­தார்.

கண்டி வன்­மு­றை­க­ளு­டன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்­கள், ஊர­டங்­குச் சட்­டத்தை மீறி­ய­வர்­கள் உள்­ளிட்ட 146 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்­றும் அவர்­க­ளி­டம் விசா­ர­ணை­கள் இடம்­பெற்று வரு­வ­தா­க­வும் பொலிஸ் ஊட­கப் பேச்­சா­ளர் மேலும் குறிப்­பிட்­டார்.

கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்­க­ளில் 120 பேர் வரை­யில் கண்டி மாவட்­டத்தை சாரா­த­வர்­கள் என்று விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ள­தா­க­வும் குறிப்­பிட்­டார்.