கண்டியில் மற்றுமொரு குழப்பம்! சிசிரிவி காணொளி வெளியானமையால் சர்ச்சை

கண்டி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நிலவிய வன்முறை சம்பவம் தொடர்பான அச்ச நிலை இன்னும் விலகவில்லை.

கண்டி, திகன பிரதேசங்களில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் பதிவாகி கொண்டுள்ளது.

இந்நிலையில் அந்தப் பகுதி வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்படும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.

கண்டியில் பூட்டப்பட்டிருந்த கடைக்குள் முகம் மூடிய அடையாளம் தெரியாத குழுகள் அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்துள்ளன.

இது தொடர்பான சிசிடிவி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

கண்டி நிர்வாக மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் பெரும் தொகையிலான படையினர் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.