கண்டியில் இன்றிரவு மீளவும் ஊடரங்கு

கண்டி மாவட்டத்தில் மாநகர சபை எல்லை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணி தொடக்கம் நாளை சனிக்கிழமை அதிகாலை 5 மணிவரை ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் ஒரு வாரமாக நீடித்த இன வன்முறைகள் இன்று தணிந்துள்ள போதும், அங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை என பொலிஸ் பேச்சாளரால் தெரிவிக்கப்பட்டது.