கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்கு முன்னின்று செயற்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் கூறிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் யார் என உடன் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டியில் ஏற்பட்டுள்ள வன்முறையை அடுத்து நாடு முழுவதும் அவசர கால சட்டம் போடப்பட்டிருக்கிறது. இன்று முக்கியமான சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கூட்டு எதிர்க் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
பாராளுமன்றத்தில் நேற்று (8) இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன. இது தொடர்பான தகவல்கள் வேறு எவையும் வெளியாகவில்லை.