கிளிநொச்சி நகர பள்ளிவாசலுக்கு ஆயுதம் தரித்த இராணுவத்தினர் பாதுகாப்பு!!

நாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி நகர்ப்பகுதியில் உள்ள நான்கு பள்ளிவாசல்களுக்கும் மற்றும் வட்டக்கச்சிப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றுக்குமாக ஐந்து பள்ளிவாசல்களுக்கு 57 ஆவது படைப்பிரிவின் இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பள்ளிவாசல்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டும் ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் எனக் கருதியுமே இவ் பாதுகாப்பு இன்று காலைமுதல் வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியின் கரைச்சிப் பகுதில் அமைந்துள்ள இவ் ஐந்து பள்ளிவாசல்களையும் கரைச்சியில் உள்ள 249 இஸ்லாமிய குடும்பங்கள் வழிபாட்டிற்காக பாவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது