சற்றுமுன் வவுனியாவில் 8வயது சிறுமி மரணம்-சகோதரியை காப்பாற்ற உதவி கோரும் பெற்றோர்(பகிரவும்)

சற்றுமுன் வவுனியாவில் இருதயமாற்று சிகிச்சைக்கு உதவிகோரியிருந்த குருமன்காடு சந்தியை சேர்ந்த ரியோன்தம்பதிகளின் இரண்டு  மகள்களான சகோதரிகளில் தனிஸ்கா என்ற 8வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் தனிஸ்கா மேலும் இதுபற்றி அறியவருவதாவது இலங்கை வவுனியாவில் வசித்து வரும் தனிஸ்கா வயது – 8 சரணிக்கா வயது – 7 blood group – o+ positive இவர்கள் இருவருக்கும் உடனடியாக இருதய மாற்று சிகிச்சைக்கு இருதயம் தேவைப்படுகிறது. இவர்களின் தாய் தந்தை நெருங்கிய சொந்தத்தில் திருமணம் முடித்ததால் ஏற்கனவே தமது மகனை கடந்த 2013ம் ஆண்டு அவரது 7வது வயதில் இழந்து தவித்தனர்.

தற்போது அவர்களது அடுத்த இரண்டு பெண் குழந்தைகளுக்கும் அவருக்கு இருந்த அதே இருதய வருத்தம் காரணமாக [Familial Dilated Cardiomyopathy with moderate to severely reduced LV Function] அவசரமாக இருதய மாற்று சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. இதில் தனிஸ்கா என்ற சிறுமி சற்றுமுன் காலமாகியுள்ளார் எனவே மற்றைய சிறுமியை காப்பாற்ற முன்வாருங்கள் இவர்களுக்கு இருதய மாற்றம் மட்டும் தான் ஒரே தீர்வு என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சாதாரணமாக ஒரு மனிதன் உயிர் வாழ 65% மேல் இதயத்தின் செயற்பாடு காணப்பபட வேண்டும். ஆனால் அவர்களது இரண்டாவது குழந்தைக்கு 10%மாகவும் 3வது குழந்தைக்கு 25% மாகவும் காணப்படுகிறது. எனவே கருனண உள்ளம் கொண்ட அன்பு நெஞ்சங்களே இருதயம் பெறக்கூடிய வழிமுறைகள், இருதயம் பெறும் முறைகள் தெரிந்தவர்கள் இருதயம் வழங்க முடிந்தவர்கள் இத் தகவலை பார்க்கும் வரை அதி வேகமாக பகிர்ந்து [Share செய்து] இப் பிஞ்சு குழந்தைகளின் உயிர் காக்க உதவுங்கள்… நன்றி மேலதிக தொடர்புகளுக்கு 

தொ.பேசி.இலக்கம் – 0094772101377 0094779620509

E-mail Address – [email protected]