இன்னொரு ஈழம் உருவாகிவிட கூடாது: கண்ணீருடன் பதிவிட்ட தமிழ் பெண்

தமிழர்கள் திட்டமிடப்பட்டு தீவிரவாதியாக மாற்றப்படுவதாக தமிழ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், ஈழத்தில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை தற்போது தமிழகத்தில் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம் – தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் சுற்று பகுதி கிராம மக்கள் இன்றைய தினம் போராட்டம் நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், போராட்டகாரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு காரணமாக 11 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து முகபுத்தகம் வாயிலாக குறித்த பெண் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.