சாவகச்சேரி பாடசாலையில் மின்னல் தாக்கம்

தென்மராட்சி, சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் கணினி ஆய்வுகூடத்தை இன்று மதியம் மின்னல் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கணினி ஆய்வுகூடத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்மானி மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதையடுத்து யாழ்ப்பாணம் மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் சாவகச்சேரிக்குச் சென்றுள்ளதுடன், இலங்கை மின்சார சபையினரும் சாவகச்சேரி மகளிர் கல்லூரிக்குச் சென்று பார்வையிட்டு தீயை அணைத்துள்ளனர். என்று தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தை அடுத்து, தென்மராட்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பாடசாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது