யாழ். இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடை பெற்ற சேக்கிழார் பெருவிழாவும் ,ஆன்மீக பக்தி ஊர்வலமும்!

ஆரம்ப காலங்களில்  மிக சிறப்பாக இடம்பெற்று வந்த யாழ் இந்துக் கல்லூரியின் சேக்கிழார் பெருவிழா கால் நூற்றாண்டு  இடைவெளிக்கு பின்னர் நேற்று 21.05.2018 மிக சிறப்பாக நடைபெற்றது .

யாழ் வண்ணை   சிவன் கோவிலில் இருந்து   சேக்கிழார் திருஉருவப்   படம் தாங்கிய  ரதம் காங்கேசன் துறை  வீதி  வழியாக ஊர்வலமாக மாணவர்களினால் எடுத்து வரப் பட்டு யாழ் இந்து கல்லாரி  சிவ  ஞான வைரவர் ஆலயத்தில் சிறப்பு பூசை வழிபாடுகளுடன் குருபூசை பெருவிழா இனிதே ஆரம்பமாகியது .
தொடர்ந்து  சமய சொற்பொழிவுகள்,சிறப்புரைகள் மாணவர்களின்கலை நிகழ்வுகள் இடம் பெற்றன .

நீண்ட கால இடைவெளியின் பின்னர் இடம் பெற்ற இந்த நிகழ்வில் சமய துறவிகள்,பேராசிரியர்கள்  பாடசாலை சமூகத்தினர் ,பழைய மாணவர்கள் ,பெற்றோர்கள் ,சமய ஆர்வலர்கள் என பலரும் பக்தி பூர்வமாக  கலந்து கொண்டனர்.