இலங்கை அணி வீரர் தனஞ்சயவின் தந்தை சுட்டுக் கொலை!!

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும் தெகிவளை மாநகர சபையின் உறுப்பினருமான ரஞ்சன் சில்வா துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பம் இன்று இரவு 10 மணியளவில் இரத்மலான பிரதேசத்தில் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவரவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.