ஓமந்தையில் வயலுக்குள் தூக்கி எறியப்பட்ட இளைஞர்!! – துண்டிக்கப்பட்ட கால் வீதியில்!! – நடந்தது என்ன?

வவுனியா, ஓமந்தையின் இன்று மதியம் நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார். விபத்தில் அவரது ஒருகால் தொடையுடன் துண்டிக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீது டிப்பர் வாகனம் நேருக்கு நேர் மோதியது என்று கூறப்படுகின்றது. 22 வயதுடைய இளைஞர் ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.

வீதியோர வயலுக்குள் தூக்கி எறியப்பட்டிருந் இளைஞரை வீதியில் சென்றோர் மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் இளைஞரின் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் 15 நிமிடங்களுக்குப் பின்னர் பொலிஸார் காலை மருத்துவமனையில் சேர்ப்பித்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

டிப்பரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.