பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

ராகல – சமகிபுர பிரதேசத்தில், பாதையை ஊடறுத்து பாய்ந்த நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிய வேளையே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உடபுசல்லாவ பிரதேசத்தை சேர்ந்த 4 ஆம் தரத்தில் கல்வி பயிலும் 9 வயதான மாணவியே சம்பவத்தில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் நுவரெலிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகல காவல்துறை மேற்கொண்டு வருகிறது.