கொழும்புச் சென்ற குடும்பஸ்தர் மாயம்- உறவினர் முறைப்பாடு

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்ற குடும்பத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் உறவினர்கள் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கச்சாய் வீதி கொடிகாமத்தைச் சேர்ந்த சிவராசா உதயகுமார் – (வயது- 48) என்பவரே காணாமல் போயுள்ளார். கடந்த 21 ஆம் திகதி கொழும்பபுக்குச் செல்வதாகச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.