அதிகாலை நடந்த சோகச் சம்பவம் – இளைஞர்கள் மூவருக்கு ஏற்பட்ட நிலமை- பொலிஸார் விசாரணை!!

பாரவூர்தியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியது. அதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து வீரவில பிரதேசத்தில் இன்று அதிகாலை நடந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய பாரவூர்தியை மடக்கிப் பிடித்த ஊர்மக்கள் சாரதியைக் கடுமையாகத் தாக்கினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் திஸ்ஸமஹாராம – கொனகமுவ பிரதேசத்தினை சேர்ந்த 27
வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார். கொனகமுவ பிரதேசத்தினை சேர்ந்த 26 மற்றும் 28 வயதுடைய இருவர் தெபரவேவ பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாரவூர்தியின் சாரதியைக் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.