கிளிநொச்சியில் அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல்! ஒருவர் கைது

அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி 155ம் கட்டைப்பகுதியில் வைத்து 1.600 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக விசேட அதிரடிப்படைப்பிரிவின் கிளிநொச்சிப் பொறுப்பதிகாரி விஜயரத்ன தலைமையிலான குழுவினர் குறித்த பகுதியை சுற்றிவளைப்பு செய்த பொழுதே சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் 1.600 கிலோகிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிளிநொச்சியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுபட்டுவரும் நபர் என அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.