சங்குப்பிட்டி பாலத்தால் பயணிப்போருக்கு எச்சரிக்கை!!

தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக, சங்குப்பிட்டிப் பாலத்தின் ஊடாகப் பயணிப்பவர்களுக்கு அவசர  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பாலப் பகுதி ஆழமான கடல் என்பதால், கடலில் குளிப்பது, ஒளிப்படம் எடுப்பது தொடர்பாக, மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் வீதி ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.