உணவில்லாமல் உயிரிழக்கும் – 22 ஆயிரம் சிறுவர்கள் அதிர்ச்சியூட்டும் தகவல்!!

உலக சனத்­தொ­கையில் நாள் ­ஒன்­றுக்கு ஒரு பில்­லியன் சிறு­வர்கள் உண­வின்றி பட்­டி­னியால் வாடு­வ­துடன், நாள் ஒன்­றுக்கு 22 ஆயிரம் சிறு­வர்கள் பட்­டி­னியால் உயி­ரி­ழப்­ப­தாக பன்னாட்டு நிறு­வ­ன­மொன்று மேற்­கொண்ட ஆய்வில் தெரி­ய­வந்­துள்­ளது.

அதேவேளை பன்னாட்டளவில் 2754 பெரும் செல்­வந்­தர்கள் உள்ளனர். அவர்கள் உலகின் 9.2 ட்ரில்­லியன் அமெ­ரிக்க டொலர் பணத்தில், 9 கோடி, இரு­பது இலட்சம் அமெ­ரிக்க டொலர்­களை உரி­மை­யாக வைத்­துள்ளனர். இவர்­களின் சொத்து 2016 ஆம் ஆண்­டை­ விட 24% அதி­க­ரித்­துள்­ளது.

இந்த 2754 பேரில் 680 பேர் அமெ­ரிக்­கவைச் சேர்ந்­த­வர்கள். 90 பேர் ஆசியாக் கண்­டத்தைச் சேர்ந்­த­வர்கள். சுமார் 730 கோடி உலக சனத்­தொ­கையில் 1% செல்­வந்­தர்­க­ளிடம் பன்னாட்டுப் பணம் 82% நிரம்­பியுள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.