ஒரே வயதையொத்த இரு யுவதிகளின் சடலங்கள் மீட்பு!!

மட்டக்களப்பு மாவட்ட செங்கலடி கரடியனாறு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இரு தற்கொலை சம்பவங்கள்.

குமாரவேலியார் கிராமம், செங்கலடியை சேர்ந்த “கஜேந்திரன் நிஸாந்தினி “என்ற 19 வயதுடைய யுவதி, தாயின் கண்டிப்பை பொறுத்துக்கொள்ளாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவமும்,

கனித்தீவு, இலுப்படிச்சேனை, பங்குடாவெளியை சேர்ந்த சௌந்தர்ராஜன் வினோதினி “என்ற 19 வயது யுவதி,

தான் விரும்பியிருந்த காதலனின் பெற்றோரிடம், தன்னைப்பற்றி பிறர் மோஷமாக கதை சொல்லிக்கொடுப்பதால், தன்னோடு பேசுவதை அவர் நிறுத்தியதால் மனஉளைச்சலுக்குள்ளாகி “அலரி விதை “உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமும்   பதிவாகியுள்ளது.