தலைமை அமைச் சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
கொடிகாமம் – பருதித்தித்துறை – பொன்னாலை வரையான வீதி, காரைநகர் – மானிப்பாய் – யாழ்ப்பாணம் வரையான வீதி, அராலித்துறை – வேலணை – புங்குடுதீவு – குறிகட்டுவான் வரையான வீதி அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்ற என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டப் பணிப்பாளரால் கூறப்பட்டது.
இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், அராலித்துறையிலிருந்து குறிகாட்டுவான் வரையிலான வீதி மறுசீரமைப்பு நடைபெறும் என்று 3 ஆண்டுகளாகப் பல்வேறு கூட்டங்களில் நீங்கள் சொல்லி வருகின்றீர்கள். அது எப்போது ஆரம்பிக்கப்படும் என்பதைக் கூறுங்கள் என்றார்.
இது தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன என்று திட்டப் பணிப்பாளரால் கூறப்பட்டது. அதனைவிடுத்து எப்போது என்று கூறுங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கேட்க, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் என்று குறிப்பிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், திட்டப் பணிப்பாளர் கூறியதை கவனமாகக் குறிப்பெடுத்து வைக்குமாறு தெரிவித்தார்.