ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கொக்குவிலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸார் அவரை 80 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்தே இந்தக் கைது நடந்துள்ளது. கைது செய்யப்பட்டவர் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.