சிறப்பாக இடம்பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் நிகழ்வு நேற்று சிறப்புற இடம்பெற்றது.

வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் என பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து அம்மனைத் தரிசித்தனர்.

தூக்கு காவடிகள், காவடிகள், பாற் செம்பு, பாற்குடம் எடுத்து பக்தர்கள் தமது நேர்த்திகளை நிறைவேற்றினர்.