யாழ்ப்பாணத்தில் பரபரப்பு – மாணவியின் சீருடை, உள்ளாடைகள் மீட்பு தடயவியல் பிரிவு தீவிர விசாரணை!!

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை மற்றும் உள்ளாடைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமையால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இடைக்காடு மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவி ஒருவரது சீருடை, கழுத்து பட்டி, செருப்பு, உள்ளாடை போன்றனவே மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலைய தடயவியல் பிரிவு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் பரபரப்பு – மாணவியின் சீருடை, உள்ளாடைகள் மீட்பு தடயவியல் பிரிவு தீவிர விசாரணை!!