ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட மூவருக்கு தூக்கு!!

கொலைச் சம்பவம் ஒன்றில் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மூன்று பேருக்கு காலி மேல் நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனை விதித்துள்ளது.

காலி மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்னவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பூஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளுக்கு, எதிராக காலி மேல் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வந்துள்ளது.

இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்தை அடுத்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் மூவரில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.