அரை சொகுசு பேருந்து சேவை டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறுத்தம்

அரை சொகுசு பேருந்து சேவை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னர் நிறுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பயணிகளால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது