வயிற்றுப் பகுதியில் மறைத்து -தங்க பிஸ்கட் கடத்திய நபர் சி்க்கினார்!!

வயிற்றுப் பகுதிக்குள் மறைத்து, தங்க பிஸ்கட்களை எடுத்து வந்த நபரொருவர், இன்று காலை கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டார்.

டுபாய் நாட்டிலிருந்து வானூர்தி நிலையத்தை வந்தடைந்த நபரை, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்ட போது, நபரின் வயிற்றுப்பகுதியில் தங்க பிஸ்கட்டுக்கள் மறைத்து வைத்திருந்ததை அறிந்தனர்.

1 கிலோ 160 கிராம் எடை கொண்ட 10 தங்க பிஸ்கட்டுக்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டன. அவற்றின் பெறுமதி 67 லட்சம் ரூபா என்று சுங்க ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

சந்தேக நபர் குறித்த நபர் கொழும்பைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.