யாழில் மாணவிகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய ஆசிரியருக்கு கல்வியமைச்சு வழங்கிய தண்டனை…?

யாழ்.வலிகாமம் வடக்கிலுள்ள பாடசாலையொன்றில் மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியருக்கு வடக்கு மாகாணக் கல்வியமைச்சு சம்பளமற்ற பணித்தடை வழங்கியுள்ளது.

குறித்த ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், இந்த மாதம்-23 ஆம் திகதி தெல்லிப்பழைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு நீதவான் 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், குறித்த பாடசாலை அதிபரின் பரிந்துரையுடன் இடம்பெற்று வரும் திணைக்கள விசாரணைகளை முன்னெடுக்கும் பொருட்டே குறித்த ஆசிரியருக்குச் சம்பளமற்ற பணித் தடை வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.