கோவில் திருவிழாவில் ஒலிபெருக்கி ஊடாக எச்சரிக்கை விடப்பட்டும் 2 மணித்தியாலங்களுக்குள் 6 பேரிடம் சங்கிலிகள் நுணுக்கமாக அபகரிக்கப்பட்டன.
சம்பவம் அராலியில் ஆவரம்பிட்டி முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று மதியம் இடம்பெற்றது.
கோவில் திருவிழாவில் கொடியிறக்கம் நேற்று. முதலாவது சங்கிலி அபகரிப்புத் தொடர்பில் கோவில் ஒலிபெருக்கி ஊடாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் அவ்வாறான அறிவிப்பு விடுக்கப்பட்டபோதும் 6 பேரிடம் சங்கிலிகள் அபகரிக்கப்பட்டுள்ளன என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.