புதையல் தோண்டியவர்கள்- பூசைப் பொருள்களுடன் சிக்கினர்!!

கரடியனாறு, எலிஸ்வேவ வன பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட நால்வர், அவற்றுக்குப் பயன்படுத்திய பூசைப் பொருள்கள் உள்ளிட்டவைகளுடன் இன்று கைது செய்யப்பட்டனர்.

கரடியனாறு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் அகழ்வுக்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மற்றும் பூசைப் பொருள்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் கொஸ்லந்த, மெரவக மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.