ஆற்றில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் மாயம்- பொலிஸார் தேடுதல்!!

உடபுஸ்ஸல்லாவ, மடுல்ல பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே காணாமல் போயுள்ளார். அவர் நீரில் மூழ்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து குறித்த நபரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.