20 பேர் கொண்ட குழு வீடு புகுந்து வாளால் வெட்டு வீட்டில் பொருள்களை உடைத்து மோட் டார் சைக்கிளுக்குத் தீ வைத்துச் சென்றது.
சம்பவம் வவுனியா கூமாங்குளம் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் நேற்றிரவு 9.30 மணி அளவில் இடம்பெற்றது.
அந்தக் குழு அங்கு பை ஒன்றில் வைத்திருந்த 7 லட்சம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றது என்று பொலிஸாருக்கு முறையிடப்பட்டது. ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் விற்ற பணம் அது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வசித்த இளைஞருக்கு வாளால்வெட்டிவிட்டு அந்தக் குழு சென்றுள்ளது. காயமடைந்தவர் மருத்துவுமனையில் சேர்க்கப்பட்டார். பொலிஸார் அங்கு விசாரணையில் ஈடுபட்டனர்.