வீடு புகுந்து வாள்வெட்டு- 7 லட்சம் ரூபா கொள்ளை -20 பேர் கொண்ட குழு அராஜகம்!!

20 பேர் கொண்ட குழு வீடு புகுந்து வாளால் வெட்டு வீட்­டில் பொருள்­களை உடைத்து மோட் டார் சைக்­கி­ளுக்­குத் தீ வைத்­துச் சென்­றது.

சம்­ப­வம் வவு­னியா கூமாங்­கு­ளம் பிள்­ளை­யார் கோவி­லுக்கு அரு­கில் நேற்­றி­ரவு 9.30 மணி அள­வில் இடம்­பெற்­றது.

அந்­த­க் குழு அங்கு பை ஒன்­றில் வைத்­தி­ருந்த 7 லட்­சம் ரூபா பணத்­தை­யும் கொள்­ளை­யிட்­டுச் சென்­றது என்று பொலி­ஸா­ருக்கு முறை­யி­டப்­பட்­டது. ஓட்டோ மற்­றும் மோட்­டார் சைக்­கிள் விற்ற பணம் அது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

அங்கு வசித்த இளை­ஞருக்கு வாளால்­வெட்­டி­விட்டு அந்­தக் குழு சென்­றுள்­ளது. காய­ம­டைந்­த­வர் மருத்­து­வு­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார். பொலி­ஸார் அங்கு விசா­ர­ணை­யில் ஈடு­பட்­ட­னர்.