மரத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்- உறவினர்கள் அதிர்ச்சி!!

ஹொரவ்பொத்தானை குளத்துக்கு அருகில், மரத்தில் தொங்கிய நிலையில் சடலமொன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது எனடறு பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் ஹொரவ்பொத்தானை,மெதவாச்சி சந்தியைச் சேர்ந்த, போகுல லியனகே சுமேத பெரேரா (31வயது) என்பவரது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

குளத்தில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமொன்று காணப்படுவதாக வழங்கப்பட்ட தகவலையடுத்து விரைந்த பொலிஸார், சடலத்தை உறவினர்களிடம் காண்பித்து
உறுதிப்படுத்தினர்.

குறித்த நபரைக் காணவில்லை என்று உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்திருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.