சடலமாக மீட்கப்பட்ட குருக்கள்- பொலிஸார் விசாரணை!!

ஏறாவூர் செங்கலடி மாணிக்கப் பிள்ளையார் ஆலய வீதியை அண்டியுள்ள வீடொன்றிலிருந்து குருக்கள் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது.

சுப்பையா பெருமாள் பாலசுப்ரமணியம் சர்மா (வயது 55) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 15 வருட காலமாக கொழும்பு -வெள்ளவத்தை ஐஸ்வரி அம்மன் ஆலயத்தில் குருக்களாக கடமையாற்றியவர் என்றும் பின்னர் அங்கிருந்து ஏறாவூர் – மைலம்பாவெளி காமாக்ஷி அம்மன் ஆலயத்தில் குருக்களாகக் கடமையாற்றியுள்ளார் என்றும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.