வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் -பாதசாரி கடவைகள்!!

யாழ்ப்பாணத்தில் பொருத்தப்பட்டுள்ள வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் பாதசாரி கடவைகள் அமைக்கும் பணிகள் தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வேம்படிச் சந்தி, ஆரிய குளம் சந்தி, சத்திரச்சந்தி, திருநெல்வேலி சந்தி, கோப்பாய் சந்தி, சுன்னாகம் சந்தி, நெல்லியடி சந்தி ஆகிய பகுதிகளில் பொருத்தப்பட்ட சமிக்ஞை விளக்கு கம்பங்களுக்கு அருகில் வெள்ளைக் கோடுகள் வரையப்பட்டு வருகின்றன.