பொலிஸார் இருவர் மீது தாக்குதல் -காத்தான்குடியில் பதற்றம்!!

சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்யச் சென்ற பொலிஸார் இருவர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர் எனத் தெரியவருகிறது.

காத்தான்குடி-6 டீன் வீதிப் பகுதியில் சற்றுமுன்னர் இந்தச் சம்பவம் நடத்துள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான இருவரும் மட்டக்களப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.