அபிவிருத்திக்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்கவிடம் கேட்டிருக்கலாமே என்று இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கேள்வி எழுப்ப, அவரிடம் கேட்க அந்தக் கூட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், இந்தப் பிரச்சினை களை ரணிலிடம் கேட்காமல், டொனால்ட் ட்ரம்பிடமா (அமெரிக்க அரசதலைவர்) கேட்பது என்று, வடக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா பதில் கேள்வி எழுப்பினார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. அரச அதிகாரிகளிடம், நிதி ஒதுக்கீடு அதிகரித்து வழங்குவது தொடர்பில் அரசியல்வாதிகள் கேள்விகளால் குடைந்து கொண்டிருந்தனர்.
இதன்போது எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா, அரச அதிகாரிகளிடம் ஏன் அதைக் கேட்கின்றீர்கள். அரசியல் ரீதியாக அணுகப்பட வேண்டிய விடயம். அரசியல் ரீதியாக அரசியல்வாதிகள்தான் இதனைப் பேசவேண்டும் என்று குறிப்பிட்டார்.
‘கடந்த வாரம் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க இங்கு வந்தபோது அதனைக் கேட்டிருக்கலாமே?’ என்று இராஜாங்க அமைச்சர் கேள்வி எழுப்பினார். அதற்கு எதிர்கட்சித் தலைவர், கடந்த கூட்டத்தில் அவரிடம் கேட்பதற்கு வாய்ப்பு தரப்படவில்லையே. அவரிடம் கேட்காமல், ட்ரம்பிடமா நாங்கள் கேட்பது என்று குறிப்பிட்டார்.