பாரிய விபத்தை ஏற்படுத்திய அமைச்சரின் மகன்….

சிலாபம் – புத்தளம் வீதியில் இலங்கை நாடாளுமன்றத்தை பிரதித்துவம் செய்யும் அமைச்சரின் மகன் பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

சிலாபம் – புத்தளம் வீதியின் பங்கதெனிய – கொட்டபிட்டிய சந்தியில் ஐக்கிய தேசிய கட்சி ராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டாரவின் மகன் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் காயமடைந்த ராஜாங்க அமைச்சரின் மகன் சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் 25 வயதான யஷோத ரங்கே பண்டார என்பவரே காயமடைந்துள்ளார்.

நீர்ப்பாசன அமைச்சிற்கு சொந்தமான கெப் வண்டி ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெப் வண்டி ஒன்றை கட்டுப்படுத்த முடியாமல் வீடு ஒன்றில் மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் கெப் வண்டி மற்றும் வீட்டிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆராச்சிகட்டுவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்