சைட்டத்துக்கு எதிராக- கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை நிரந்திரமாக மூடக் கோரி, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு – வந்தாறுமூலை வளாக முன்றலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாணவர்கள் தமது கோரிக்கைகளடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் விடுதிப் பகுதியிலிருந்து புறப்பட்டு பிரதான வீதியோரம் நின்று கோஷங்களை எழுப்பினர்.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.